தனியார்துறையினர் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான சட்டவரைபு பாராளுமன்றிற்கு

தனியார்துறையினர் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான சட்டவரைபு பாராளுமன்றிற்கு

தனியார்துறை ஊழியர்களின் வயதை அதிகரிப்பதற்கான விடயங்கள் அடங்கிய சட்டவரைபு அனுமதிக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தனியார்துறையினர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக அதிகரிப்பதற்கான குறித்த சட்டவரைபை சபையில் சமர்ப்பிக்க பாராளுமன்ற அலுவலகளுக்கான பாராளுமன்ற உபகுழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பிள்ளைகளை பணிக்கமர்த்தும் 1956 இல 47 சட்டத்தின் அபாயகரமான வேலைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பில் திருத்தம் செய்வதற்கான பிரேரணை அதே நாளில் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image