சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி ரயில் சேவையை ஆரம்பிக்க கோரிக்கை!

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி ரயில் சேவையை ஆரம்பிக்க கோரிக்கை!

உரிய சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து ரயில் சேவைகளை ஆரம்பிக்குமாறு ரயில் திணைக்கள தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதான செயலாளர் எஸ். டி வித்தானகே கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் ரயில் சேவைகள் ஆரம்பிக்காமையினால் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பெறும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர் நாட்டில் அனைத்து துறைகளும் ஆரம்பித்துள்ள நிலையில் ரயில் சேவை மாத்திரம் இன்னும் ரயில் சேவை மாத்திரம் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விடயங்களை கவனத்திற்கொண்டு விரைவில் ரயில் சேவையை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆரம்பிக்குமாறு அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image