தீர்வு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானம் - ஆசிரியர் சங்கங்கள்

தீர்வு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானம் - ஆசிரியர் சங்கங்கள்

சம்பளப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் வழங்கும் தீர்வு தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக அதிபர் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று (12) நன்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து கருத்து தெரிவித்தபோதே தொழிற்சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளன.

சம்பள கொடுப்பனவை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

எனினும், உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்குமாறு தொழிற்சங்க பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திய போதிலும் இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்வதா, இல்லையா என்பது தொடர்பில் அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image