ஜோர்தான் செல்வதானால் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்

ஜோர்தான் செல்வதானால் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்

​ஜோர்தான் நுழைவதானால் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஜோர்தான் நாட்டுக்குள் உள்நுழைய முன்கூட்டிய அனுமதி மற்றும் அங்கு சென்றடைந்த பின்னர் தனிமைப்படுத்தல் கட்டாயமல்ல என்று பணியகம் பணியகம் அதன் முகநூல் பக்கத்தில் தகவல் வௌியிட்டுள்ளது.

எனினும் அந்நாட்டு விமானநிலையத்தில் இறங்கியவுடன் பிசிஆர் பரிசோதனை செய்துக்கொள்வது கட்டாயமாகும். மேலும் விமானத்தில் செல்லும் போது, விமானத்தில் ஏறும் முன்னர் விமான நிலையம் அறிவித்துள்ள சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது கட்டாயமாகும் என்றும் பணியகம் அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image