தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்- ஜோசப் ஸ்டாலின்

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்-  ஜோசப் ஸ்டாலின்

தமது கோரிக்கைக்கான தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இதுவரை நாம் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்புவதற்கான பணிகளை ஆரம்பிக்கவில்லை. எமது போராட்டம் முடிவுறும் வரையில் புலமைப்பரிசில் மற்றும் கபொத உயர்தர பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பும் பணிகளை நாம் ஈடுபடப்போவதும் இல்லை. பொலிஸூக்கு செல்லுமாறு அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் என்ன செய்கிறார்கள்? செப்டெம்பர் 15ம் திகதி வரையில் வாய்ப்பு வழங்கியுள்ளோம். பிரச்சினையை தீர்க்கவேண்டியுள்ளது.

இவ்வாறு இருக்கையில் மாணவர்கள் குறித்து நினைத்து குறித்த செயற்பாட்டை முன்னெடுக்குமாறு அமைச்சின் செயலாளர் தொழிற்சங்கங்களிம் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே மாணவர்கள் இரு மாதங்களாக ஒன்லைன் கல்வியை இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image