நடமாட்டத்தடை தளர்த்துவது குறித்து இன்று கலந்துரையாடல்

நடமாட்டத்தடை தளர்த்துவது குறித்து இன்று கலந்துரையாடல்

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டத்தடையை எதிர்வரும் 7ம் திகதி தளர்த்துவதா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு செய்யப்பட்டதன் பின்னர் இன்று (28) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தளர்த்துவது தொடர்பான தீரமானம் எடுக்கப்படும் என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 25ம் திகதி நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டபோது மக்கள் சுகாதார விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதாக பல தரப்பினர் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image