தொழிற்சங்க நடவடிக்கையிலுள்ள துறையினருக்கு தடுப்பூசி- கலந்துரையாடல் இன்று

தொழிற்சங்க நடவடிக்கையிலுள்ள துறையினருக்கு தடுப்பூசி- கலந்துரையாடல் இன்று

இதுவரை கொவிட் 19 தடுப்பூசி வழங்காத காரணத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பித்துள்ள கிராமசேவையார்கள் உட்பட ஏனைய துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று (27) நடைபெறவுள்ளது.

இன்று இரவு பிரதமர் மாளிகையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எம் சிந்ரானந்த தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொழிலாளர்களுடன் நேரடியாக பணியாற்றும் துறைகளைச் சார்ந்தவர்கள் தற்போது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image