தொற்றுக்குள்ளான வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு பராமரிப்பு நிலையம்

தொற்றுக்குள்ளான வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு பராமரிப்பு நிலையம்

கொவிட் 19 தொற்றுக்குள்ளான சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க முதலீட்டு ஊக்குவிப்புச்சபை நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

வர்த்தக வலயங்களுக்குள்ளேயே இப்பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கமைய முதலாவது சிகிச்சை நிலையம் கட்டுநாயக்க வர்த்த வலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் 300 கட்டில்களுடன் கூடிய பராமரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் தொற்றுக்குள்ளான தொழிலாளர்கள் தற்போது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்நிலையங்கள் அமைத்துக்கொடுக்கப்படுவதாக கட்டுநாயக்க மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image