சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக கிராம அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக கிராம அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

இன்று (25) நள்ளிரவுடன் தமது சேவைகளில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டம் சரியாக செயற்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பத்தில் ஒழுங்கு முறைப்படி ஆரம்பிக்கப்பட்டாலும் கூட தற்போது அச்செயற்பாட்டில் பல முறைகேடுகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image