துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சபை சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சபை சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்புத் தொடர்பான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 149 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மூன்றாவது வாசிப்பு 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்னர் குறித்த சட்டமூலம் மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் இரண்டாவது வாசிப்பு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன் பின்னர் இடம்பெற்ற குழு நிலையில் அரசாங்கத்தினால் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு ஆளும் கட்சி இணங்கவில்லை. இதனால் மூன்று சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.

அதேநேரம், குழு நிலையில் முன்வைக்கப்பட்ட பல்வேறு திருத்தங்களில் தமது எதிர்ப்பினை பதிவுசெய்யுமாறும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

- ஆதரவு 148; எதிர் 59
- மு.கா. உள்ளிட்ட 17 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலத்தின், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 89 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

 

தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image