பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவு

பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவு

பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு நிரந்தர கொடுப்பனவு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் பி. பி. ஜயசுந்தர நிதியமைச்சுக்கு இவ்விடயத்தை கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாதாந்தம் 2,500 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலை, ஆரம்ப கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கு வழங்குமாறு நிதியமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image