இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவை

இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவை

இன்று (11) நள்ளிரவு தொடக்கம் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு தொடக்கம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை ரத்து செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே திணைக்களம் இவ்வறிப்பை வௌியிட்டுள்ளது.

எதிர்வரும் 30ம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படவுள்ளது.

அத்தியவசிய தேவைகளுக்கு போக்குவரத்தை மேற்கொள்வது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image