க.பொ த சாதாரதர பரீட்சைக்கு முன்னர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

க.பொ த சாதாரதர பரீட்சைக்கு முன்னர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக, பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபவோருக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடவடிக்கைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், உத்தியோகத்தர்களும், பங்குபற்றவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், பரீட்சைகளை நடத்தும் செயற்பாடுகளில் கல்வி அமைச்சு கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை அமுல்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிலவும் அபாயகரமான சூழலை கருத்திற்கொண்டு, ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறும், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

​கெபிடல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image