தடுப்பு வழங்கப்பட்டதன் விபரங்கள்

தடுப்பு வழங்கப்பட்டதன் விபரங்கள்

நேற்று மட்டும் 9,983 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒக்ஸ்போர்ட்- எஸ்ட்ராசெனெக்கா கொவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 156,310 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 29ம் திகதி 5,286 பேருக்கும் 30ம் திகதி 32,539 பேருக்கும் 31ம் திகதி 21,329 பேருக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

பெப்ரவரி முதலாம் திகதி 36, 396 பேருக்கும் 2ம் திகதி 23,217 பேருக்கும் 3ம் திகதி 21,147 பேருக்கும் 4ம் திகதி 6,413 பேருக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையினூடாக ஒக்ஸ்போர்ட் -எஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தானது 250,000 சுகாதாரத்துறையினருக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

T

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image