துறைமுக அதிகாரசபையின் கீழ் கிழக்கு முனையம்

துறைமுக அதிகாரசபையின் கீழ் கிழக்கு முனையம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முற்றாக துறைமுக அதிகாரசபையின் கீழியங்குவதற்கான அனுமதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்திய நிறுவனமொன்றுக்கு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்க அரசாங்கம் தீர்மானத்ததையடுத்து துறைமுக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காலி, திருகோணமலை துறைமுக தொழிற்சங்கங்கள், சுங்கத் திணைக்கள தொழிற்சங்கம் மற்றும் ஏனைய துறைகளை சார்ந்த தொழிற்சங்கங்களும் அரசின் தீர்மானத்திற்கு எதிரான கருத்துக்களையும் வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image