தேசிய மொழிகள் ஆணைக்குழுவில் மொழிபெயர்பாளர் பற்றாக்குறை

தேசிய மொழிகள் ஆணைக்குழுவில் மொழிபெயர்பாளர் பற்றாக்குறை

தேசிய மொழிகள் ஆணைக்குழுவில் நூற்றுக்கு 50 வீதமான மொழிபெயர்ப்பாளர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி டி. கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது அவ்வாணைக்குழுவில் 21 பேர் பணியாற்றுகின்றனர். எனினும் மேலும் 21 பேருக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தேவை தொடர்பில் பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடய பொறுப்பு அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதியளித்துள்ளார் என்றும் டி. கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image