C190 குறித்து அட்டனில் தௌிவுபடுத்தல் நிகழ்வு

C190 குறித்து அட்டனில் தௌிவுபடுத்தல் நிகழ்வு

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, துன்புறுத்தல்களை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் C190 பிரகடனம் நிமித்தம் ப்ரொடெக் தொழிற்சங்கத்தின் அட்டன் கிளையில் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்றது.

கொட்டகல பிரதேச அங்கத்தவர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் C190 தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டது. அத்துடன் இப்பிரகடனத்தை இலங்கையில் நிறைவேற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் தௌிவுபடுத்தப்பட்டது.

இத்தௌிவுபடுத்தல் நிகழ்வில் கொட்டகல பிரதேச வீட்டுப் பணிப்பெண்கள் கலந்துகொண்டதுடன் ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தின் அங்கத்தவர் ஹரிப்பிரிய ஹெட்டியாராய்ச்சி உட்பட பிரதான அமைப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

கொவிட் 19 கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் இவ்விடயம் தொடர்பில் மேலும் பல தௌிவுபடுத்தல் நிகழ்வுகள் நடத்துவது என தீர்மானிக்கப்டப்பட்டது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image