கோரிக்கைளை முன்வைத்து இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளம் போராட்டம்

கோரிக்கைளை முன்வைத்து இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளம் போராட்டம்

அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் கட்டம் கட்டமாக போராட்டத்தை நடத்த அகில இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளம் தீர்மானித்துள்ளது.

கொரோனாவை ஒழிப்பை நோக்காக கொண்ட விஞ்ஞானபூர்வமான செயற்றிட்டம் உருவாக்குதல், வரவுசெலவில் சுகாதார சேவைக்கு அதிக நிதியொதுக்குதல், அனைத்து சுகாதார சேவை ஊழியர்களுக்கும் கொவிட் 19 அனர்த்த கொடுப்பனவு வழங்கல், மற்றும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் வசதிகளை செய்துகொடுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

அதற்கமைய, நாளை (16) குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலை, டிசம்பர் 17ம் திகதி வெல்லவாய வைத்தியசாலையிலும் மஹியங்க பிரதான வைத்தியசாலையிலும் 18ம் திகதி, பதுளை மாகாண பொது வைத்தியசாலை, மொனராகல மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் அம்பாறை மாவட்ட வைத்தியசாலை என்பவற்றிலும் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

குறித்த தினங்களில் மேலே குறிப்பிடப்பட்ட வைத்தியசாலைகள் முன்பாக நன்பகல் 12 மணிக்கு இவ்வார்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

protest Heath

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image