பரிசோதனை முடிவுகள் வௌிவர முன்னர் வௌிநாடு சென்றவருக்கு கொரோனா

பரிசோதனை முடிவுகள் வௌிவர முன்னர் வௌிநாடு சென்றவருக்கு கொரோனா

கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி பண்டாநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்காக சென்றவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 24ம் திகதி தனியார் மருத்துவமனையொன்றில் பிசிஆர் பரிசோதனை செய்த எண்டேருமுல்ல பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபரில் பரிசோதனை முடிவுகள் கொவிட் 19 நேர்மறையானதாக காட்டியுள்ளது. அது அவ்வாறு இருக்க குறித்த நபர் மற்றுமொரு தனியார் மருத்துவமனையில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அதன் முடிவுகள் எதிர்மறையானதாக இருந்துள்ளது.

எனினும் மற்றுமொரு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மஹர வைத்திய அதிகாரி ஆலோசனை வழங்கியதற்கமைய மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அதிலும் அவருடைய பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்ததையடுத்து குறித்த நபரை வைத்தியசாலை அனுமதிக்க அதிகாரிகள் சென்றவேளை அவர் பரிசோதனை முடிவுகள் வௌிவர முன்னரே வௌிநாடு சென்று விட்டார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image