தென் கொரிய தொழில்வாய்ப்பிற்காய் காத்திருப்போர் தடுப்பூசிக்கு பதிய தேவையில்லை!

தென் கொரிய தொழில்வாய்ப்பிற்காய் காத்திருப்போர் தடுப்பூசிக்கு பதிய தேவையில்லை!

தென் கொரியாவில் தொழில்வாய்ப்பினை பெற தகுதி பெற்ற இலங்கையர்கள் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பதிவு செய்யத்தேவையில்லை என இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே அவர்களுடைய தகவல்கள் பதியப்பட்டுள்ளமையினால் புதிதாக பதிவு செய்யத்தேவையில்லை என்று பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே தென் கொரியா தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்கள் கொவிட் 19 தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையதளத்தினூடாக அல்லது செய்துக்கொள்ளத் தேவையில்லை. பணியகத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்துக்கொள்ள தேவையில்லை என்றும் பணியகம் அறிவித்துள்ளது.

அத்துடன் தென் கொரியாவில் பணியாற்றி வந்தநிலையில் விடுமுறைக்கு நாடு திரும்பியிருப்பின் கொவிட் 19 முழுமையாக செலுத்திக்கொள்வற்கான காலம் இருப்பின் மாத்திரம் ( இரண்டு தடவைகள் செலுத்துவதற்கு குறைந்தது இரு மாதங்கள்) தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான இணையதளத்தில் பிரவேசித்து பதிவு செய்துகொள்ளுமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image