கட்டாரில் இருந்த 38 பேர் இலங்கை வந்தனர்

கட்டாரில் இருந்த 38 பேர் இலங்கை வந்தனர்

கட்டாரில் இருந்து 38 இலங்கையர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர் என்று கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு வந்த அனைவருகடகும் விமானநிலையத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதுடன், முப்படையினரின் பராமரிப்பிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஓமானில் இருந்து 30 பேரும் மாலைதீவில் இருந்து 6 பேரும் இத்தாலியில் இருந்து 22 பேரும் பாகிஸ்தானில் இருந்து ஒருவரும் ருவாண்டாவில் இருந்து 6 பேரும் இந்தியாவில் இருந்து 290 பேரும் ஜெர்மனியில் இருந்து 6 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்த 50 பேரும் நாட்டுக்கு வரவுள்ளனர் என்றும் தெரவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image