தொடர்ந்து 3 நாட்களுக்கு மூடு பனி- கட்டார்

தொடர்ந்து 3 நாட்களுக்கு மூடு பனி- கட்டார்

கட்டாரில் மூன்று நாட்களுக்கு மூடுபனிக் காலைநிலை நிலவும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

4, 5, 6 ஆகிய தினங்களில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மூடுபனிக்கான சாத்தியம் காணப்படுவதனால் பொது மக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குறித்த நேரங்களில் வாகனங்களை செலுத்துபவர்கள் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

மேலும் கட்டாரில் பல நகரங்களில் மழைக்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image