கட்டார் செல்லும் இலங்கையர்கள் கவனத்திற்கு!

கட்டார் செல்லும் இலங்கையர்கள் கவனத்திற்கு!

இலங்கையிலிருந்து கட்டாருக்கு பயணிக்கும் இலங்கையர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதற்கமைய, கீழே வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளை இலங்கையர்கள் பின்பற்றவேண்டியது கட்டாயமாகும்.

 கட்டார் பயணிக்கும் கட்டார் பிரஜைகள், (Qatar Citizens) மற்றும் கத்தார் வதிவிட வீசா வைத்துள்ளோர் (Qatar ID Holders) ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேற்படி நபர்கள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்திருத்தல் கட்டாயமாகும்.

பொதுவான நிபந்தனைகள்

  • கட்டார் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியிருத்தல் (இரண்டு டோஸ்கள்)
  • கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமானவர்கள் கட்டார் நாட்டுக்குள் நுழைவதற்கு குணமடைந்த நாளிலிருந்து 14 நாட்கள் கடந்திருப்பது கட்டாயமாகும்.
  •  72 மணித்தியாலங்களுக்குள் PCR பரிசோதனை செய்து கட்டாருக்குள் நுழைந்த பின்னர் எதிர்மறை (PCR Negative) பெறுபேற்றைக் கொண்டிருத்தல்
  •  கட்டாருக்குள் வந்த 36 மணி நேரத்திற்குள் மீண்டும் PCR பரிசோதனையை மேற்கொள்ளல் வேண்டும்

முக்கிய குறிப்பு - மேற்படி நிபந்தனைகள் புதிதாக கட்டாருக்கு பயணிப்பவர்கள் மற்றும் சுற்றுலா வீசாவில் பயணிப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் கட்டாயம் இரண்டு நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிறைவு செய்தல் வேண்டும்.

முழுமையான தகவல்களுக்கு சுகாதார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்திற்கு பிரவேசிக்கும் படி பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image