கட்டார் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள்

கட்டார் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள்

இலங்கையில் நிலவும் மருந்து பற்றாக்குறைக்கு உதவும் வகையில் கட்டார் செம்பிறைச் சங்கம், USD 100,000/- நிதியை ஒதுக்கியுள்ளது என்று கட்டாருக்கான இலங்கை தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டார் வௌிவிவகார அமைச்சர் Lolwah Rashid Al-Khater, அலுவலக பேச்சாளர் மற்றும் பிரதி வௌிவிவகார அமைச்சருக்கும் கட்டாருக்கான இலங்கை தூதுவர் மஃபாஸ் மொஹிதீன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த திட்டமானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image