பாதுகாப்பற்ற முறையில் புலம்பெயர முயற்சித்த 67 பேர் கைது

பாதுகாப்பற்ற முறையில் புலம்பெயர முயற்சித்த 67 பேர் கைது

 பாதுகாப்பற்ற முறையில் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்கில் கல்முனை கடற்பரப்பில் வைத்து கடற்பனையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளவை விடவும் அதிக பயணிகளை ஏற்றியவாறு சென்றமை அவதானிக்கப்பட்டதையடுத்து கடற்படையினர் குறித்த படகை பரிசோதனை செய்துள்ளனர். இதன்போது 59 ஆண்களும் 6 பெண்களும் 8 சிறுவர்களும் அவர்களை வேறு நாட்டுக்கு அழைத்து சென்ற மேலும் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று அடையாளங்காணப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image