மாவட்டச் செயலகங்களில் குடிவரவு குடியகல்வு திணைக்கள உப அலுவலகம்

மாவட்டச் செயலகங்களில் குடிவரவு குடியகல்வு திணைக்கள உப அலுவலகம்

அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் குடிவரவு குடியல்வு உப அலுவலகம் ஒன்றை நிறுவ தீர்மானித்துள்ளதாக அத்திணைக்கள்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார் என்று 'லங்காதீப' இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.

குறித்த அலுவலகங்களை அமைப்பதற்கான இடம் தொடர்பில் தற்போது மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டச் செயலகங்களில் ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.

 இது தவிர தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களிலும் உப அலுவலகங்களை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதகாவும் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் உள்ள சன நெருக்கடியை குறைக்கும் நோக்கில் உப அலுவலகங்கள் அமைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image