சட்டரீதியாக பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 6650 டொலர் வரை சுங்கத் தீர்வு

சட்டரீதியாக பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 6650 டொலர் வரை சுங்கத் தீர்வு

சட்ட ரீதியான வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதன் மூலம் விமான நிலையத்தில் 6650 டொலர்கள் வரை சுங்கத் தீர்வை பெறுமதியை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த முன்மொழிவுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 இதேவேளை, சட்டரீதியாக வங்கிகளுக்கு பணம் அனுப்பும் இலங்கையர்கள் வாகனமொன்றை இறக்குமதி  செய்துக்கொள்வதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பமொன்றும் வௌியிடப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தில் இவ்விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

இதேவேளை வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் சட்ட ரீதியான வழிமுறைகளில் வங்கிகளின் ஊடாக பணத்தை அனுப்பி வைத்தால், வாகனம் ஒன்றை இறக்குமதி செய்ய அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் இந்த விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

விண்ணப்பம்

சட்டரீதியாக வங்கிகளினூடாக  பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே பல்வேறு சலுகைகளை இவ்வமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image