கடல்மார்க்கமாக பிரான்ஸ் செல்ல முயற்சித்த 50 பேர் கைது!

கடல்மார்க்கமாக பிரான்ஸ் செல்ல முயற்சித்த 50 பேர் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ் செல்ல முயற்சித்த சுமார் 50 பேர் வென்னப்புவ - கொலின்ஜாடிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (01) அதிகாலை பேருந்து மற்றும் வேன் ஆகியவற்றின் ஊடாக குறித்த கடற்கரை பகுதிக்கு சந்தேகநபர்கள் சென்றுக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 6 பெண்களும், 4 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சிலாபம், மாரவில, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image