மணிக்கு 32 பேர் என்ற வகையில் புலம்பெயரும் இலங்கையர்கள்!

மணிக்கு 32 பேர் என்ற வகையில் புலம்பெயரும் இலங்கையர்கள்!

நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு மணி நேரத்திற்கு 32 பேர் என்ற வகையில் தொழில் நிமித்தம் புலம்பெயர்ந்துள்ளனர் என்று சண்டே டைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

2022ம் ஆண்டின் முதல் அரையாண்டு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை ஆய்வுக்குட்படுத்தி இவ்விடயம் அறியப்பட்டுள்ளதாக அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இத்தரவுக்குள் இலங்கையில் இருந்து இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக புலம்பெயரும் நபர்களின் எண்ணிக்கை உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image