இஸ்ரேலில் காணாமல் போன இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் இல்லை!

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் இல்லை!

இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு காணாமல் போயுள்ளதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்ந்துப் பார்ப்பதற்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார காஸா பிரதேசத்திற்கு மேற்கொள்ளப்படவிருந்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய பாதுகாப்புப் பிரிவு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய, இப்பயணம் ரத்து செய்யப்பட்டு மீள திரும்பியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பலஸ்தீன மோதல்களின் சிக்கி இரு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தொடர்பில் ஆராய்ந்துப் பார்ப்பதற்காக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உட்பட பிரதிநிதிகள் காஸா பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இந்நிலையில் காஸா பிரதேசத்தில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றமையினால் அவ்விடத்தை விட்டு வௌியேறுமாறு பாதுகாப்புப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளதாக தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போன இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image