மலேசியாவில் பணிக்கு சென்ற இலங்கைப் பெண் மரணம்!

மலேசியாவில் பணிக்கு சென்ற இலங்கைப் பெண் மரணம்!

சுற்றுலா வீசா பயன்படுத்தி மலேசியாவில் பணிக்காக சென்ற இலங்கைப் பெண்ணொருவர் (44) அடுக்குமாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ம் திகதி இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

கொபய்யனே பிரதேசத்தில் வசித்து வந்த மாகலந்தனகே தொன் ரேணுகா நிலந்தி பண்டார என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த முகவர் ஊடாக குறித்த பெண் சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி மலேசியா சென்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image