வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சில இலங்கையர்கள் நாடு திரும்ப இணக்கம்!

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சில இலங்கையர்கள் நாடு திரும்ப இணக்கம்!

 சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வௌிநாடு செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் சர்வதேச கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களில் சிலர் மீண்டும் இலங்கை திரும்ப இணக்கம் வௌியிட்டுள்ளனர்.

85 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 7ம் திகதி இலங்கையைச் சேர்ந்த 303 பேரைக் கொண்ட LADY R3 இலங்கை மீன்பிடி படகொன்று வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியது. படகு விபத்துக்குள்ளானதையடுத்து அப்படகில் இருந்த ஒருவர் இலங்கை கடற்படையின் பாதுகாப்பு பிரிவிற்கு தெரியப்படுத்தினார். பாதுகாப்பு பிரிவு வியட்நாம் பாதுகாப்பு பிரிவிற்கு தெரியப்படுத்தியது.

இதனையடுத்து வியட்நாம் சிங்கப்பூர், மலேசிய அரசாங்கங்களுடன் இம்மீன்பிடிப்படகு தொடர்பான தகவல்களை பறிமாறிக்கொண்டுள்ளது. அத்துடன் அருகில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பான் கப்பலான ஹிலியோஸ் லீடர் கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தி தெரியப்படுத்தியதையடுத்து ஒன்றிணைந்த செயற்பாட்டினூடாக குறித்த இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த மீன்பிடிப்படகில் 264 ஆண்களும் 19 பெண்களும் 20 சிறுவர்களும் இருந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருந்தனர் என்றும் தற்போது வியட்நாமில் அகதிகளாக அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image