சென்னை விமானநிலையத்தில் பெருந்தொகையான தங்கத்துடன் இலங்கையர் கைது

சென்னை விமானநிலையத்தில் பெருந்தொகையான தங்கத்துடன் இலங்கையர் கைது

சுமார் 9.85 மில்லியன் பெறுமதியுடன் இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் 2 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மும்பையில் இருந்து சென்னை விமாநிலையத்தை கடந்த வௌ்ளிக்கிழமை வந்தடைந்த குறித்த நபரிடம் சுமார் 11 பொதிகளில் வௌிநாட்டு தங்கம் இருந்தமை கண்டறியப்பட்டது.

இந்திய சுங்கச் சட்டம் 1962 இற்கு அமைய குறித்த இலங்கை பயணி கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image