கடவுச்சீட்டு வழங்கும் முறை குறித்து திணைக்களத்தின் அறிவிப்பு

கடவுச்சீட்டு வழங்கும் முறை குறித்து திணைக்களத்தின் அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி தொடக்கம் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மாத்தறை, வவுனியா, கண்டி ஆகிய பிரதேச குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்களில் இச்சேவை ஆரம்பமாகவுள்ளது.

அதற்கமைய, குறித்த சேவையின் முதற்கட்டமாக www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்கு விஜயம் செய்து நாள் மற்றும் நேரம் ஒதுக்கிக்கொண்ட 100 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

மேற்குறிப்பிட்ட காரியாலயங்களில் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக விண்ணப்பதாரிகளுக்கு ஏற்கனவே நாள் மற்றும் நேரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாள் மற்றும் நேரம் ஒதுக்கிக்கொள்ளதாவர்கள் காரியாலயத்துக்கு வருகைத் தர வேண்டாம் என்றும் திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.

அதேபோல், மேற்குறிப்பிட்ட காரியாலயங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான நாள் மற்றும் நேரம் ஏற்கனவே விண்ணப்பதாரிக்கு வழங்கப்படடுள்ளது. எனவே, தொழில் நிமித்தம் அவசரமாக வௌிநாடு செல்லவிருப்பவர்கள் அதனை உறுதிப்படுத்தும் கடிதத்தை 070 6311711 என்ற வட்ஸப் இலக்கத்துக்கு அனுப்பி வைத்த பின்னர் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு விரைவில் நாள், நேரம் வழங்க திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image