அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கையர்

அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கையர்

அவுஸ்திரேலியாவின் 47வது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக ​நேற்று (21) நடைபெற்ற இலங்கையில் பிறந்த ஹோல்ட் லேபர் வேட்பாளர் கஸண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றுள்ளார்.

ஹோல்ட்டில் வெற்றிப்பெற்ற இலங்கையில் பிறந்த முதலாவது பெண் கஸண்ட்ரா பெர்னாண்டோ ஆவார். அவர் 10,408 வாக்குகளால் முன்னிலை வகிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் மற்றொரு இலங்கையரான ராணி பெரேராவுக்கு எதிராக போட்டியிட்டே வெற்றியீட்டுள்ளார்.

1988ம் ஆண்டு இலங்கையில் பிறந்த கஸண்ட்ரா, தனது 11வது வயதில் குடும்பமாக அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image