சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் கைது!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் - புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக  படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று 19) அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க இருந்த இரண்டு இயந்திரப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, புதன்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில்   விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன் போது இரு படகுகளில் அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகிய நிலையில் 4 பெண்களும் ,17 ஆண்களுமாக, 21 பேரை கைது செய்ததுடன் இரு படகுகளையு மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி,  வவுனியா மற்றும் திருகோணமலை மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இதன் பிரதான சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்நெடுத்துள்ளதாக காத்தான்குடி தெரிவிக்கின்றனர்.

Pho_Aust_10.png

Pho_Aust_13.png

Pho_Aust_2.png

Pho_Aust_4.png

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image