கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்பது தற்காலிகமாக இடைநிறுத்தம்

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்பது தற்காலிகமாக இடைநிறுத்தம்

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணினி செயலிழப்பின் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தீர்மானம் அறிவிக்கபட்டதையடுத்து ஏற்கனவே திணைக்களச் சேவைக்காக ஏற்கனவே வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை இன்று (5) வௌியிட்டனர்.

 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திணைக்கள சேவைகள் கடந்த செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது.

 

இந்த செயலிழப்பு காரணமாக அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக தலைமையலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று திணைக்களம் நேற்று பொது மக்களுக்கு அறிவித்திருந்தது. பின்னர் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதையடுத்து சேவை வழமைக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image