சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயற்சித்த ஐந்து பெண்கள் கைது

சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயற்சித்த ஐந்து பெண்கள் கைது

போலி விஸா அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, இத்தாலிக்கு செல்ல முயற்சித்த 5 இலங்கையர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 
அவர்களில் மூவர், கட்டார் ஊடாக இத்தாலிக்கு செல்ல முயற்சித்தவர்களாவர்.
 
விஸா அனுமதிப்பத்திரம் தொடர்பில், ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், 45 வயது தாய் மற்றும் அவரது 14 மற்றும் 18 வயதுடைய பெண் பிள்ளைகள் இருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
இதேநேரம், டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்ல முயற்சித்த, மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணும், புத்தளம் பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களின் விஸா அனுமதிப்பத்திரம், போலியாக தயாரிக்கப்பட்டமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image