இங்கிலாந்து செல்லும் கனவுடன் உள்ள இலங்கையர்களுக்கான வாய்ப்பு!

இங்கிலாந்து செல்லும் கனவுடன் உள்ள இலங்கையர்களுக்கான வாய்ப்பு!

இங்கிலாந்து சுகாதாரதுறையில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை - இங்கிலாந்து அண்மையில் வௌிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.

அதற்கமைய, பிரித்தானியா சுகாதாரத்துறையில் பணியாற்றுவதற்கு அந்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வித்தகமையுடன் IELTS ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சையிலும் சித்தியடைந்திருப்பது அவசியம் என்று சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கு இதனூடாக இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை சார்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எஸ். எச். முனசிங்க ஆகியோரும் இங்கிலாந்து சார்பில் தென் ஆசியா, ஐக்கிய நாடுகள் அமைப்புகள் பொதுநலவாய அமைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் கையெழுத்திட்டுள்ளார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image