டுபாயில் தொழில்வாய்ப்பு - ஏமாற்றிய நபர் கைது!

டுபாயில் தொழில்வாய்ப்பு - ஏமாற்றிய நபர் கைது!

 டுபாயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வெலிகம பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் 18 பேரை ஏமாற்றி 2.8 மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் வேலைவாய்ப்பு - ஏமாற்றிய நபர் கைது!

 

வெலிக பிரதேசத்தை சொந்த இடமாக கொண்ட குறித்த நபர் பாணந்துறை பிரதேச பெண்ணை திருமணம் செய்து தற்போது பொலன்னறுவ, கதுறுவெல பிரதேசத்தில் வசித்து வருகிறார் என்றும் தனியார் ஆங்கில மொழி பயிற்றுவிப்பாளரான குறித்த நபர் இரு குழந்தைகளின் தந்தை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெலிகம, அக்குரஸ்ஸ, பாணந்துறை, குருணாகல, எஹலியகொட மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசத்தில் கற்பிக்கும் குறித்த நபர் மாணிக்கக்கல் வியாபாரத்திலும் ஈடுபவர். குறித்த நபரை நம்பி வௌிநாட்டு வேலைவாய்ப்பினை பெற பணம் கொடுத்த 18 பேர் தாம் ஏமாற்றப்பட்டுள்ளமையினை அறிந்துகொண்ட பின்னர் வெலிகம பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், குறித்த நபரை பொலன்னறுவ, கதுறுவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இன்று (10) நீதிமன்றில் நிறுத்தப்படுவார் என வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image