ஆஸியில் ஒமிக்ரோன் அச்சுறுத்தல்

ஆஸியில் ஒமிக்ரோன் அச்சுறுத்தல்

ஒமிக்ரோன் வைரஸ் சமூகத்தில் பரவ ஆரம்பித்து விட்டது என்று அவுஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒமிக்ரோன் தொற்றாளரிடம் பெறப்பட்ட தகவலையடுத்து இவ்வனுமானத்துக்கு வந்துள்ளதாக அவுஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமக்கு தொற்று இருப்பது கண்டறிய முதல் அதிகமான வௌிநடமாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

மக்களை குழப்பமடைய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள ஆஸி அதிகாரிகள், குறித்த நபர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர் என்றும் தொற்றுக்குள்ளாகியமை குறித்து அறியாத அந்நபர் சிட்னி நகரில் உள்ள பிரபலமான விற்பனைத் தொகுதிக்கு சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது,

குறித்த நபர் பயணம் செய்த விமானத்தில் பயணித்த பயணிகள் தற்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான 6 பேர் இதுவரை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image