கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு

மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே கடவுச்சீட்டுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு, குடியகழ்வுத் திணைக்கள பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களிலேயே இவ்வாறு மட்டுப்படுத்தப்படுத்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளுக்கு கடவுச்சீட்டுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அத்தியவசிய தேவையுடைவர்கள் மாத்திரம் https://eservices.immigration.gov.lk/td என்ற இணையதள முகவரியினூடாக அருகாமையிலுள்ள குடிவரவு, குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தில் பெயரை முன்பதிவு செய்து தமது சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாதவர்கள் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image