வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு புதிய தலைவர்

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு புதிய தலைவர்

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவருக்கான நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இன்று வழங்கினார்.

பணியகத்தின் முன்னாள் தலைவர் அண்மையில் காலமானதையடுத்து தற்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைவராக நியமிக்கப்பட முன்னர் மஹிந்த ஹத்துருசிங்க பணியகத்தின் பொது முகாமையாளராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image