இலங்கையிலிருந்து எந்தெந்த நாடுகளுக்குச் செல்ல தடை?

இலங்கையிலிருந்து எந்தெந்த நாடுகளுக்குச் செல்ல தடை?

இலங்கையில் இருந்து விமான பயணிகள் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை துபாய், குவைத், இத்தாலி, மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பிரதித் தலைவர் ரஜீவசிறி சூரியாராய்ச்சி இன்று (12) இதனைத் தெரிவித்தார்.

இலங்கை, பங்களாதேஷ்,நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பயணிகள் நாட்டுக்குள் நுழைய இன்று முதல் ஐக்கிய அரபு இராச்சியம் தடைவிதித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தொடர்ந்து குவைத்தும் குறித்த நாடுகளில் இருந்து பயணிகள் உள்நுழைய தடை விதிப்பதாக அறிவித்தது. இதேவேளை, இலங்கை உட்பட தெற்காசிய நாடுகள் நாட்டுக்குள் நுழைய மாலைதீவு அரசும் தடை விதித்துள்ளது.

வேகமாக பரவி வரும் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாடுகள் இவ்வாறு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image