இத்தாலியில் இறந்த இலங்கையரின் சடலம் தாய்நாட்டுக்கு

இத்தாலியில் இறந்த இலங்கையரின் சடலம் தாய்நாட்டுக்கு

இத்தாலிக்கு தொழில் நிமித்தம் சென்று உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டு தொழில் நிமித்தம் இத்தாலி சென்ற நெதுங்கும்புர, குடுமிரிஸ்லந்த பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

குறித்த நபர் ரோமில் உள்ள கொல்ப் மைதானத்தை பராமரிக்கும் தொழில் ஈடுபடடு வந்தவர் என்றும் கடந்த மார்ச் மாதம் பொலிஸாரால் திடீரென்று சோதனைக்குட்படுத்தப்பட்டபோது துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை குறித்த நபரின் சடலம் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image