சவுதியில் தடுப்பிலுள்ள இலங்கைப் பெண்கள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சவுதியில் தடுப்பிலுள்ள இலங்கைப் பெண்கள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சவுதி அரேபியாவில் தடுப்பு முகாமில் உள்ள இலங்கை பெண்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண்களை விடுதலை செய்வதற்கும், அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் சவுதி அரேபிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, அவர்களை சவுதி அரேபியா விமான சேவை மூலம் நாட்டுக்கு அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறன. அதற்கமைய, 156 இலங்கை பெண்கள் நாட்டுக்கு மீள அழைத்து வரப்படவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image