புலம்பெயர் தொழிலளர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை அவசியம்- பிரதமர்

புலம்பெயர் தொழிலளர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை அவசியம்- பிரதமர்

நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 ஒழிப்புக்கான செயலணியுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார பிரச்சினையினால் நாடு திரும்ப முடியாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்று இதன்போது இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனுமதியை வழங்கல் மற்றும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்தல் தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, பிரதமர் செயலாளர் காமினி செனரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image