வியட்நாமில் தங்கியிருந்த 152 இலங்கையர்கள் நாட்டுக்கு

வியட்நாமில் தங்கியிருந்த 152 இலங்கையர்கள் நாட்டுக்கு

வியட்நாமில் தங்கியிருந்த 152 இலங்கையர்கள் இன்று (28) அதிகாலை மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த சுமார் 400 இலங்கையர்கள் வியட்நாம் கடற்படையினரால் மீட்கப்பட்டு ஹெனோசி நகரில் தங்க வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இலங்கை குடிவரவு குடியல்வு திணைக்கள அதிகாரிகள் வியட்நாமுக்கு சென்று விசாரணைகளை நடத்தியதையடுத்து மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்த 152 பேருக்கு தற்காலிக கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image