டுபாய் தொழில்வாய்ப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

டுபாய் தொழில்வாய்ப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
டுபாய் தொழில்வாய்ப்புக்காக வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்க்கும் தொழில் முகவர் நிறுவன உரிமையாளர்களுடன், தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
 
தற்காலத்தில் டுபாய் தொழில்வாய்ப்பு விடயத்தில் இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய நிலைமையை  ஆராய்ந்து தொழில் முகவர் நிறுவன உரிமையாளர்களால் அதிகளவான இலங்கையர்களுக்கு டுபாயில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான யோசனை மற்றும் கோரிக்கை அடங்கிய கோவை இதன்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
அவர்களினால் முன்வைக்கப்பட்ட சாதகமான கோரிக்கைகள் மற்றும் யோசனைகளை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image