இலங்கையர் உள்ளிட்ட 27 ​பேர் ருமேனியாவில் கைது!

இலங்கையர் உள்ளிட்ட 27 ​பேர் ருமேனியாவில் கைது!

இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளைச் சேர்ந்த 27 புலம்பெயர்வாளர்கள், ருமேனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் ட்ரக் ரக வாகனம் மூலம், ஹங்கேரிக்கு செல்ல முயன்ற நிலையில், ருமேனியா எல்லை பொலிஸாரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்ட 11 இற்கு மேற்பட்டோரும், 21 முதல் 67 வயதுடைய பங்களாதேஷ் மற்றும் எரித்திரிய நாட்டவர்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது

ஆடைகள், துணிகள் மற்றும் உலோகக் கம்பிகள் கொண்டுசெல்லப்பட்ட ட்ரக் ரக வாகனத்தில் அவர்கள் பயணித்துள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ருமேனிய எல்லை பொலிஸ் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image